நாட்டில் தொழிலற்று இருக்கின்ற பட்டதாரிகள் தமக்கு விரைவாக நியமனங்களை வழங்குமாறு வலியுறுத்தி பல்வேறு பாகங்களிலும் உண்ணாவிரதப் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் அண்மைக்காலமாக நடத்தி வருகின்றனர். அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இவ்வாறு வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதை அவதானிக்க முடிகிறது. அதுமட்டுமன்றி நேற்று முன்தினம் கொழும்பிலும் வேலையற்ற பட்டதாரிகள் தமக்கு நியமனங்களை வழங்கக் கோரி ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றையும் நடத்தியிருந்தனர்.
இதேவேளை, அம்பாறை மாவட்ட வேலையற்ற தமிழ் பட்டதாரிகள் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் நேற்று 9 ஆவது நாளாகவும் தொடர்ந்துள்ளது. கிழக்கு மாகாணசபை முன்னால் நடத்தப்படும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கிழக்கு மாகாணசபையினால் பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் நியமனங்கள் மாவட்ட ரீதியில் வழங்கப்படுகின்ற காரணத்தினால் அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் புறக்கணிக்கப்படுவதாக வலியுறுத்தப்படுகிறது.
கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான பரீட்சையில் அதிகூடிய புள்ளிகள் பெற்ற தமிழ் பட்டதாரிகள் முற்றுமுழுதாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆம் ஆண்டு வரை பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கு இதுவரைகாலமும் எந்தவிதமான நியமனங்களும் வழங்கப்படவில்லையென்றும் தெரிவித்து இந்த உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உண்ணாவிரதம் இருக்கும் பட்டதாரிகள் கிழக்கு மாகாண முதலமைச்சருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டபோதிலும் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ள நிலையில் மத்திய அரசாங்கத்தின் பதிலை எதிர்பார்த்து தமது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்வதாக தெரிவிக்கின்றனர். மேலும் கிழக்கு மாகாணசபை இந்த விடயத்தில் தலையிட்டு விரைவில் தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடும் பட்டதாரிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தம்மை நிரந்தர நியமனத்தில் உள்வாங்கக் கோரி கால வரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த காலத்தில் கிழக்கு மாகாணசபை மற்றும் மத்திய அரசினால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் இதுவரை நிறைவேற்றப்படாத நிலையில் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தினை நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் போராட்டத்தில் 2012 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பட்டம் பெற்றவர்களே அதிகளவில் கலந்து கொண்டுள்ளனர்.
குறிப்பாக பல தடவைகள் இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்கள் நடத்திய போதும் இந்தப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்குவதற்கு மாகாண அரசும் மத்திய அரசும் இழுத்தடிப்பு செய்து வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 1400 பட்டதாரிகள் இருப்பதாகவும் கடந்த பல வருடங்களாக வேலைவாய்ப்பின்றி கஷ்டப்படுவதாகவும் பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர். மாகாண முதலமைச்சர் மற்றும் மத்திய அரசாங்கம் என்பன இந்த விடயத்தில் தலையிட்டு வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகள் வலியுறுத்துகின்றனர்.
இது இவ்வாறிருக்க, யாழ்ப்பாண மாவட்டத்திலும் வேலையற்ற பட்டதாரிகள் தமக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தரும் படி கோரிக்கை விடுத்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். மத்திய அரசின் ஊடாக அறிவிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கான நியமனங்களை விரைவில் பெற்றுத் தருமாறும் இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை கொழும்பில் நேற்று முன்தினம் வேலையற்ற பட்டதாரிகள் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடத்தியிருந்தனர். தமக்கு விரைவில் நியமனத்தைப் பெற்றுத் தருமாறும் பட்டம் பெற்று நீண்ட நாட்களாக தொழிலற்று இருப்பதாகவும் எனவே விரைவாக வேலைவாய்ப்பினை வழங்குமாறும் பட்டதாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். இவ்வாறு அண்மைக்காலமாக வேலையற்ற பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டங்கள் நாடளாவிய ரீதியில் அதிகரித்துள்ளமையை காண முடிகிறது.
நாடொன்றைப் பொறுத்தவரையில் வேலையின்மை பிரச்சினை மற்றும் பட்டதாரிகளுக்கு உரிய வேலை வாய்ப்புக்கள் இல்லாத சிக்கல்கள் என்பன பொதுவாகவே காணக்கூடிய விடயமாகும். வேலையின்மை பிரச்சினை அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் அதிகமாக காணப்படுகின்றது. ஆனால், இவற்றை காரணம் காட்டாமல் பட்டம் பெற்று நாட்டின் அபிவிருத்திக்கு தமது பங்களிப்பை செய்ய தயாராக இருக்கின்ற இளைஞர், யுவதிகளுக்கு அதற்கேற்ப வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்கவேண்டியது பதவியில் இருக்கும் அரசாங்கத்தின் கடமையாகும்.
குறிப்பாக ஒவ்வொரு வருடமும் பட்டங்களைப் பெற்று பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறுகின்றவர்கள் வேலைவாய்ப்பின்றி நீண்டகாலம் இருக்கின்றனர் எனின் அந்நாட்டின் கல்வி மற்றும் பொருளாதார கட்டமைப்பில் பொருத்தமற்ற நிலைமை காணப்படுவதாகவே கருதப்படும். எனவே இவை தொடர்பில் அரசாங்கத்தின் கொள்கை வகுப்பாளர்கள் கவனம் செலுத்தி பல்கலைக்கழகங்களிலிருந்து பட்டம் பெற்று வெளியில் வருகின்றவர்களை நாட்டின் அபிவிருத்தியிலும் முன்னேற்றத்திலும் பங்கேற்கச் செய்யும் வகையில் வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
பட்டதாரிகள் தொழில்வாய்ப்புகள் இன்றி வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தும் அளவுக்கு நிலைமையை இட்டுச் செல்லக் கூடாது. ஒரு மாணவன் பாடசாலை கல்வியை முடித்து அதன் பின்னர் பல்வேறு கஷ்டங்களுக்கும் சவால்களுக்கும் முகம் கொடுத்தே பட்டப்படிப்பை நிறைவு செய்கிறான். அவ்வாறு பட்டங்களைப் பெறுகின்றவர்களுக்கு தொழில்வாய்ப்புக்கள் கிடைக்காவிடின் அவர்களின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாவதுடன் நாட்டின் முன்னேற்றமும் பாதிக்கப்படுகிறது. பட்டம் பெற்றுள்ள குறிப்பிட்ட இளைஞர், யுவதிகளின் சேவையை நாடு பெறமுடியாமல் போவது துரதிர்ஷ்டவசமாகும். இந்த நிலையை மாற்றி அமைக்கவேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.
விசேடமாக பட்டதாரிகளும் இந்த தொழிலற்ற விவகாரம் தொடர்பில் சற்று ஆழமாக சிந்தித்து செயற்பட முன்வரவேண்டும். பட்டம் பெற்றவர்கள் தாம் அரசாங்கத்துறையில் இணைந்து நாட்டின் முன்னேற்றத்திற்காக சேவையாற்றவேண்டுமென கருதுவதில் தவறில்லை. ஆனால் அவ்வாறு அரச துறையில் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்ள முடியாது விடின் பட்டதாரிகளும் சோர்ந்து போகக் கூடாது. காரணம் இன்று தனியார் துறையில் மிகவும் கவர்ச்சிகரமான சம்பளங்களில் அதிகளவான தொழில்வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. அவை தொடர்பிலும் பட்டதாரிகளும் கவனம் செலுத்த வேண்டியது சமூகத்தின் ஒரு தேவையாக காணப்படுகின்றது.
மேலும் அனைவரையும் அரச சேவையில் சேர்த்துக்கொள்ள முடியாது என்ற வாதத்தை அரசாங்கம் எந்த சந்தர்ப்பத்திலும் முன்வைக்கலாம். ஆனால், அவ்வாறு கூறி படித்து பட்டம் பெற்றுள்ள இளைஞர், யுவதிகளின் எதிர்காலத்துடனும் அவர்களின் அடுத்த கட்ட முன்னேற்றத்துடனும் அரசாங்கம் பொறுப்பின்றி செயற்பட முடியாது. இது முழு நாட்டினதும் எதிர்கால வளர்ச்சியை பாதிக்கும் விடயமாகும்.
எனவே, பதவிக்கு வந்துள்ள புதிய அரசாங்கம் இந்த வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வினைப் பெற்றுக்கொடுக்கவேண்டும். குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் பட்டதாரிகளின் வேலையற்ற பிரச்சினைக்கு வடமாகாணசபையும் கிழக்கு மாகாணசபையும் விரைவில் தீர்வைக் காண முன்வரவேண்டும். அத்துடன் மத்திய அரசாங்கமும் இந்த விடயத்தில் ஆக்கபூர்வமான முறையில் தலையிட வேண்டியது மிகவும் அவசியமாகும்.
பட்டம் பெற்றவர்கள் தொடர்ச்சியாக நியமனங்களை கோரி வீதிகளில் போராடுவது நாட்டுக்கு நல்லதல்ல. எனவே இந்த விடயம் தொடர்பில் அரசாங்கமும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் கவனம் செலுத்தி விரைவாக தீர்வைக் காண முன்வரவேண்டும். அதுமட்டுமன்றி நாட்டின் கல்வி மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பில் அவசியமான கொள்கை ரீதியான மாற்றங்களை செய்வதன் மூலமே வேலையற்றோர் பிரச்சினைக்கு விரைவாக தீர்வைக் காண முடியும். ஆகையால் கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்த, மிகவும் உணர்வுபூர்வமான விடயம் தொடர்பில் அக்கறை செலுத்தி விரைவாக பிரச்சினைக்கு தீர்வுகாண முன்வரவேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.
பாலசுந்தரம் டொனால்ட்
Thursday, October 8, 2015
பட்டதாரிகளின் வேலையற்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணுங்கள்
Wednesday, June 4, 2014
தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள் !
தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள் !
1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள்
நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும்
சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யார்
சொன்னாலும் ரசித்தாலும் தான், நான்
அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள்.
உங்களை நீங்களே ரசியுங்கள்.
2. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள்
இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப்
பேசத் தெரியாதென்று.
3. உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக்
காட்ட வெறித் தனமாய் முயற்சி செய்யுங்கள்.
4. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய்
இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை.
5. உங்களுக்கு எதுவும் தெரியாது. எதிரில்
நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும்
நினைக்காதீர்கள். இந்த எண்ணம் இருந்தால்
நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம்
இன்றி சொல்ல முடியாது.
6. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன்
நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம்
என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க
வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர்
மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த
வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்.
7. அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள்
அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும்
வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.
கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர
எறிந்து விட்டு முன் செல்லுங்கள்.
Tuesday, April 29, 2014
இயேசுவே மெய்யான தெய்வம்
இயேசு பிறந்து, மரித்து பின் உயிர்த்தெழுந்தாரா? என்ற கேள்விகளுக்கு பதில் - இது ஓர் சரித்திர உண்மை
(மூல ஆதாரம்: BBC செய்தி நிறுவனம்)
(மூல ஆதாரம்: BBC செய்தி நிறுவனம்)
2011ம் ஆண்டு கிறிஸ்தவர்களுக்கு ஓர் அற்புதமான ஆண்டு. ஏன்???
இயேசு கிறிஸ்து என்ற ஓர் தெய்வம் உலகில் இருந்ததுண்டா? அவரை சிலுவையில் அறைந்தார்களா? அவர் மீண்டும் உயிர்த்தெழுந்தாரா? என்ற பல கேள்விகள் இன்றும் பலருக்கு முளைத்து கொண்டே இருக்கிறது. இதற்கு சரித்திர பூர்வமாகவும், வேதாகமத்தின் அடிப்படையிலும் நாம் பல ஆதாரங்களை எடுத்து வைத்தும் சிலர் வேண்டும் என்றே முரண்டு பிடிப்பது நமக்கு தெரிந்த உண்மை.
இயேசு கிறிஸ்து என்ற ஓர் தெய்வம் உலகில் இருந்ததுண்டா? அவரை சிலுவையில் அறைந்தார்களா? அவர் மீண்டும் உயிர்த்தெழுந்தாரா? என்ற பல கேள்விகள் இன்றும் பலருக்கு முளைத்து கொண்டே இருக்கிறது. இதற்கு சரித்திர பூர்வமாகவும், வேதாகமத்தின் அடிப்படையிலும் நாம் பல ஆதாரங்களை எடுத்து வைத்தும் சிலர் வேண்டும் என்றே முரண்டு பிடிப்பது நமக்கு தெரிந்த உண்மை.
சரி.. 2011 ல் நமக்கு ஓர் ஆச்சரியமூட்டும் வகையில் ஓர் அதிசய புதைபொருள் கிடைத்துள்ளது. அதை பற்றி இங்கே பார்ப்போம்.
பரிசுத்த வேதாகமத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த சவக்கடலில் தோல் கையெழுத்து பிரதிகள் வேதாகமத்திற்கு மிகப்பெரிய பொக்கிஷமாக திகழ்ந்து வருகிறது. அதைப்போல தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த 70 உலோக புத்தகங்கள் சவக்கடல் கண்டுபிடிப்புக்கு பின் கிடைக்கப்பெற்ற அரியதொரு விலையேறப்பெற்ற பொக்கிஷமாக வல்லுனர்கள் கருதுகின்றனர்.
இந்த உலோக புத்தகத்தின் பக்கங்கள் கிரெடிட் கார்டை காட்டிலும் பெரிதாக காணப்படவில்லை, அது முழுவதும் படிமப்படங்கள், குறியீடுகள்(symbols) மற்றும் வார்த்தைகளால் நிறைந்துள்ளது. அவை எல்லாமே மேசியாவை உலகுக்கு வெளிப்படுத்தும் மையக்கருவாகவே அமைந்துள்ளது. இன்னமும் சொல்லப்போனால் கிறிஸ்து இயேசுவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை தெளிவாக குறிப்பிட்டுள்ளது.
எப்படியெனில் இந்த உலோகங்களில்
"‘That struck me as so obviously a Christian image. There is a cross in the foreground, and behind it is what has to be the tomb [of Jesus], a small building with an opening, and behind that the walls of the city.
"‘That struck me as so obviously a Christian image. There is a cross in the foreground, and behind it is what has to be the tomb [of Jesus], a small building with an opening, and behind that the walls of the city.
அந்த படத்தில் ஓர் கல்லறை தெரிவதாகவும், அதன் பின்பு கல்லறை திறந்திருப்பதாகவும், அதன் பின்பு ஓர் நகரத்தின் சுவர் இருப்பதாகவும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கண்டு பிடிப்பு கிறிஸ்தவர்களுக்கு கிடைத்த ஓர் அறிய பொக்கிஷம். இயேசு கிறிஸ்து வாழ்ந்தது உண்மை, அவர் மரித்தது உண்மை, பின்பு மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தது உண்மை. இதை நிருபிக்கும்வன்னமாக இந்த கண்டுபிடிப்பு அமைந்துள்ளது.
இந்த உலோக புத்தகங்கள் ஜோர்டானிலுள்ள தொலைதூர பின் தங்கிய பகுதியை சேர்ந்த ஒரு குகையில் 5 ஆண்டுகளுக்கு முன்னதாக கண்டெடுக்கப்பட்டுள்ளது, கி.பி 70ல் எருசலேம் ரோமர்களால் அழிக்கப்பட்டபோது அங்கிருந்து தப்பிய கிறிஸ்தவ அகதிகள் ஜோர்டானின் இந்த குகை பகுதிகளில் மறைந்து வாழ்ந்துள்ளனர். அவர்கள் இந்த குகையில் விட்டுச்சென்ற புத்தகங்க்ளே இந்த 70 உலோக புத்தகங்கள், இந்த 70 புத்தகங்களை துவக்க உலோகவியல் சோதனைக்கு உட்படுத்தியபோது அவைகளில் சில கி.பி முதலாம் நூற்றாண்டை சேர்ந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பிரிட்டனை சேர்ந்த பழங்கால புத்தகங்கள் மற்றும் வரலாற்று ரீதியிலான அகழ்வாராய்ச்சி நிபுணர் டேவிட் எல்கிங்க்ஸ்டன் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட புத்தக்ங்களில் சில் கிறிஸ்தவ வரலாற்றில் ஒரு மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.
இதை பற்றி ஓர் முகமதிய பேராசியர் மற்றும் ஆராய்ச்சியாளர் ஜைத் அல்-சாத் கூறும் போது இந்த புத்தகம் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட பின்பு அவரின் விசுவாசிகளால் எழுதப்பட்டிருக்கலாம் என்று கூறி இருக்கிறார். The
director of the Jordan's Department of Antiquities, Ziad al-Saad, says"
the books might have been made by followers of Jesus in the few decades
immediately following his crucifixion."
மேலும் இதை பற்றி அறிந்து கொள்ள
http://www.bbc.co.uk/news/world-middle-east-12888421
http://www.dailymail.co.uk/sciencetech/article-1371290/70-metal-books-Jordan-cave-change-view-Biblical-history.html
http://www.bbc.co.uk/news/world-middle-east-12888421
http://www.dailymail.co.uk/sciencetech/article-1371290/70-metal-books-Jordan-cave-change-view-Biblical-history.html
இன்னும் பல சரித்திர கண்டு பிடிப்புகள் இயேசுவே தெய்வம் எனவும், அவர் உயிர்தெழுந்தது உண்மை எனவும் கூறி உள்ளன.
Subscribe to:
Posts (Atom)